எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் ரஜினி உள்பட 3 சூப்பர் ஸ்டார்கள்?

  • IndiaGlitz, [Thursday,February 09 2017]

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது 'பாகுபலி 2' படத்தை இயக்கி முடித்துவிட்டு அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளில் பிசியாக உள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. முதல் பாகத்தை விட இருமடங்கு இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எஸ்.எஸ்.ராஜமெளலி தனது அடுத்தபடமாக இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தை திரைப்படமாக இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

'மகாபாரதம்' என்ற பிரமாண்டமான படத்தில் இந்தியாவின் மூன்று முக்கிய சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த், அமீர்கான் மற்றும் மோகன்லால் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமீர்கான், 'ராஜமெளலி மகாபாரதம் கதையை படமாக எடுத்தால் கிருஷ்ணன் அல்லது கர்ணன் கேரக்டரில் நடிக்க விருப்பம்' என்று தெரிவித்திருந்தார். மகாபாரத்தத்தின் முக்கிய கேரக்டரான கிருஷ்ணன், கர்ணன், துரியோதனன் ஆகிய கேரக்டர்களில் இவர்கள் மூவரும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படவுள்ளதாகவும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

ஓபிஎஸ் அவர்களுக்கு நேரில் சென்று ஆதரவளித்த எம்ஜிஆரின் கலையுலக வாரிசு

புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தனது கலையுலக வாரிசு என்று அறிவிக்கப்பட்டவர் பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ். அதிமுகவில் சில ஆண்டுகள் பணியாற்றியவர். தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தாலும், அரசியலை கூர்ந்து கவனித்து வருபவர்...

ஓபிஎஸ், சசிகலா குறித்து கமல்ஹாசன் கூறியது என்ன?

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில  நாட்களாக நடைபெற்று வரும் தமிழக அரசியல் குழப்பங்களை உன்னிப்பாக கவனித்து அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் கூறி வருகிறார். அந்த வகையில் இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் யார் தமிழக முதல்வராக வரவேண்டும் என்று அவர் கூறிய கருத்தை பார்ப்போம்...

தமிழகத்தை இரண்டாக உடைத்துவிட வேண்டாம். கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களாகவே தமிழக நிலவரம் குறித்து பரபரப்பான கருத்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார். ஜல்லிக்கட்டு பிரச்சனை சமயத்தில் அவரது கருத்துக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது...

அதிமுக எம்.எல்.ஏக்களின் டெல்லி பயணம் திடீர் ரத்து

தமிழக முதல்வராக சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதில் கவர்னர் வித்யாசாகர் ராவ் தாமதம் செய்து வருவதால் இதுகுறித்து புகார் அளிக்க அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் டெல்லி சென்று குடியரசு தலைவரிடம் முறையிட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக இன்று இரவு சென்னை விமான நிலையத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்பிக்&

அதிமுக வங்கிக்கணக்கை முடக்க வேண்டும். வங்கி அதிகாரிகளுக்கு ஓபிஎஸ் கடிதம்

தமிழக முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று வரை அதிமுகவின் பொருளாளராகவும் இருந்தார். ஆனால் நேற்றிரவு சென்னை மெரீனாவில் ஆழ்ந்த தியானத்திற்கு அவர் அளித்த பேட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது...